செய்திகள் :

கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஜூன் 1 தொடக்கம்

post image

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசித்திருவிழா ஜூன்1 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில் மே 31 அன்று மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும்.

இதையடுத்து சனிக்கிழமை (1.6.2025) காலை 9:25 முதல் 11 மணிக்குள் கொடியேற்றமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது. 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 9 மணிக்கு வெள்ளி கேட கத்தில் அம்மன் வீதி உலா வருவார்.

தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப, வெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 7 -ஆம் நாளான சனிக்கிழமை (7.6.2025) மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் கண்ணு டைய நாயகி கோயில் வளாகத்தில் வலம் வருவார்.

எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (8.6.2025) களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட் டுதல், அன்று இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா காட்சி நடைபெறும்.

ஒன்பதாம் திருநாளான திங்கள்கிழமை (9.6.2025) அதிகாலை அலங்கரிக் கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள்வார். அன்று காலை 9.25 மணிக்கு தேரோட்டம் நடை பெறும்.

அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவார். பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (10.6.2025) காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துவர். பதினொன்றாம் நாளான புதன்கிழமை (11.6.2025) காலை உத்ஸவ சாந்தி, மாலை வெள்ளி ஊஞ்சல் உத்ஸவத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா: மே 31 கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவிலில் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவில் வைகாசி விசாகத்திருவிழா மே 31 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறு... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் விரைவில் அா்ச்சகா் நியமனம்

ஆகம விதிகள் இல்லாத திருக்கோயில்களில் அா்ச்சகா்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீ... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று(மே 4) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் துவக்கம்!

காஞ்சிபுரம்: கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையார் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கால் : காரைக்கால் அம்மையார், சோமநாதர், ஐயனார் கோயில்களில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ... மேலும் பார்க்க