செய்திகள் :

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

post image

கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி. இவரது மகளான வன்ஷிகா சையினி (வயது 21) கனடா நாட்டில் மேற்படிப்பு பயின்று வந்தார்.

கடந்த ஏப்.25 ஆம் தேதியன்று கனடாவின் ஒட்டாவா நகரத்தில் புதியதாக வாடகைக்கு வீடு தேடிச் சென்றிருந்த அவர் மாயமானார். அவரது செல்போனின் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், மறுநாள் அவர் எழுத வேண்டியத் தேர்வுக்கு அவர் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 3 நாள்கள் கழித்து நேற்று (ஏப்.28) ஒட்டவாவிலுள்ள கடற்கரையில் வன்ஷிகாவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டிலுள்ள இந்திய உயர்நிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூராய்வு சோதனை முடிந்த பின்னரே தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்ஷிகாவின் மரணத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ளபட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவரது குடும்பத்தினர் வன்ஷிகாவின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும், வன்ஷிகாவின் குடும்பத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினரான ராஜ் குமார் சப்பேவால் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான பல்பிர் சிங் சீச்வால் இதுகுறித்து இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

சீன உணவகத்தில் தீ: 22 போ் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இந்தத்... மேலும் பார்க்க

விண்வெளி செல்லும் இந்திய வீரர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா மே 29ஆம் தேதி விண்வெளிக்கு செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வ... மேலும் பார்க்க

நியூசிலாந்து கடலுக்கு அடியில் நிலநடுக்கம்...! சுனாமி எச்சரிக்கை?

நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில்;... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிரு... மேலும் பார்க்க

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி! கட்சி அந்தஸ்தும் பறிபோனது!

கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும், அவரது புதிய ஜனநாயகக் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்த நிலையில், கட்சிக்கான அந்தஸ்து பறிபோ... மேலும் பார்க்க

இந்தியா போர் தொடுத்தால்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் பாகிஸ்தானியர்கள்! கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.ஆனால், அதற்கெல்... மேலும் பார்க்க