செய்திகள் :

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

post image

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இருமாநிலங்களையும் இணைக்கும் 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தின் செவோகே மற்றும் சிக்கிமின் ராங்போ ஆகிய இருநகரங்களையும் இணைக்கக் கூடிய 52 கி.மீ. நீளமான 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கலிம்போங் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் அந்த நெடுஞ்சாலையின் கலி ஜோரா, சேதி ஜோரா, செல்ஃபி தாரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பாதையை முடக்கியுள்ள பாறைகள் உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கனரக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சாலையை முடக்கியுள்ள பாறைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு வழியில்லாத நிலை உருவாகியுள்ளதால், கலிம்போங் மாவட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க