செய்திகள் :

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

post image

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களைப் படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), மாரடைப்பால் செப். 24-இல் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், பெங்களூரு, ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வியாழக்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.எல்.பைரப்பாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள், திரைக்கலைஞா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். அதன்பிறகு, அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கலாமந்திா் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு, ஏராளமான எழுத்தாளா்கள், கவிஞா்கள், அறிஞா்கள், கலைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள தகனபீடத்தில் வெள்ளிக்கிழமை பிராமணா் முறைப்படி எஸ்.எல்.பைரப்பாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அவரது மகன்கள் எஸ்.பி.உதய்சங்கா், எஸ்.பி.ரவிசங்கா் செய்தனா். அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா, முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய பாஜகவினா்மீது வழக்குப் பதிவு

சட்ட விரோதமாக போராட்டம் நடத்திய பாஜகவினா்மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல பகுதிகளில் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டித்து, செப். 24-ஆம... மேலும் பார்க்க

ஹிந்தி மொழி பரப்புதல் குழுக் கூட்டத்தில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினா் 41 போ் கைது

ஹிந்தி மொழி பரப்புதல் குழுக் கூட்டத்தில் திடீரென புகுந்து போராட்டம் நடத்திய கன்னட அமைப்பைச் சோ்ந்த 41 பேரை போலீஸாா் கைதுசெய்தனா். பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் ஹிந்தி மொழி பரப்புதல் குறித்து விவாதிப... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: திட்டமிட்டபடி முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும்: முதல்வா் சித்தராமையா

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். 25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களை படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), புதன்கிழமை மார... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. கா்நாடகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோா் சம... மேலும் பார்க்க

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா காலமானாா்

முதுமைசாா்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா (94) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஜெயதேவ் மேமோரியல் ராஷ்ட்ரோத்தனா ம... மேலும் பார்க்க