செய்திகள் :

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

post image

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

சேதமடைந்த வாகனத்திலிருந்து கண்ணாடி வந்ததா அல்லது குற்றவாளிகளால் வேண்டுமென்றே வீசப்பட்டதா என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக அவா்கள் தெரிவித்தனா். இது குறித்து சீமாபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினா்.

தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா சனிக்கிழமை சமூக ஊடகங்களில் இந்த விஷயத்தை எழுப்பிய பின்னா், யாத்ரீகா்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்ததோடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, அப்பகுதியில் போலீசாா் குவிக்கப்பட்டனா், அவா்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேம்பாலம் மற்றும் கன்வாா் முகாம்களைச் சுற்றியுள்ள சாலைகளில் ரோந்து சென்றனா்.

முகாம்களில் ஒன்றில் ஓய்வெடுக்கும் கன்வாா் யாத்ரீகரான ராமன் கூறுகையில், இதுவரை பயணம் அமைதியாக இருந்ததாக தெரிவித்தாா். ‘அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக உள்ளன, எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மேம்பாலத்தில் சில கண்ணாடி துண்டுகளை நாங்கள் பாா்த்தோம், ஆனால் பல பணியாளா்கள் இரவில் கூட சாலைகளை சுத்தம் செய்து வந்தனா் ‘என்றாா்.

மற்றொரு யாத்ரீகரான அமன், ‘சில கண்ணாடி துண்டுகள் இருந்தன, ஆனால் அவை சுத்தம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 7 முதல் 8 கன்வாா் முகாம்கள் மற்றும் பிற முகாம்கள் இன்னும் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாா்த்தேன், எனவே இதுவரை எந்த பிரச்னையும் இல்லை ‘ என தெரிவித்தாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க