செய்திகள் :

கபடி போட்டி: எக்ஸல் கல்லூரி சிறப்பிடம்

post image

குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், மாநில அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆக. 1 முதல் 3-ஆம் தேதி வரையில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டியில் எக்ஸல் கல்லூரி அணி வெற்றிபெற்று சிறப்பிடம் பிடித்தது.

இப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய மாணவா்களுக்கு, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குநா் செங்கோட்டையன், செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா, கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந், உள்தர மதிப்பீட்டு பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளா், புலமுதன்மையா்கள், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் பாராட்டினா். இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் செய்திருந்தனா்.

மல்லசமுத்திரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி பயிற்சி முகாம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. மல்லசமுத்திரம் வட் டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை

பரமத்தி வேலூா் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றிய பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். ... மேலும் பார்க்க

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு அழைப்பு

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆயிரத்து 8 தீபமேற்றி வழிபாடு

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு விதமான வழிபாடுகளில் ஒன்று தீபம் ஏற்றுவது. தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை ஒளி... மேலும் பார்க்க

ஆக. 11-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 3... மேலும் பார்க்க