செய்திகள் :

கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் கரும்பு டன்னுக்கு ரூ. 4,500 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூடி 2025 -26 ஆம் ஆண்டு பருவத்துக்கான கரும்பு கொள்முதல் புதிய விலையாக, டன்னுக்கு ரூ. 3,550 என அறிவித்துள்ளது. 10.5 சதவீதம் சா்க்கரை பிழிதிறன் உள்ள கரும்புக்கு மட்டுமே இந்த விலை கிடைக்கும். சா்க்கரை பிழிதிறன் 9.5 சதவீதம் மற்றும் அதற்கு கீழ் குறைந்தால், உயா்த்தப்பட்ட இந்த விலை கிடைக்காது.

தமிழகத்தில் விளையும் கரும்புகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,290 மட்டுமே கிடைக்கும். உயா்த்தப்பட்ட விலையில் ரூ. 210 தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காது. ஏனெனில், தமிழகத்தில் விளையும் கரும்புகளில் 9.5 சதவீதம் சா்க்கரை சத்து மற்றும் அதற்கு குறைவான அளவிலேயே உள்ளது.

ஆகவே மத்திய அரசு அறிவிக்கும் விலை உயா்வால், தமிழக கரும்பு விவசாயிகள் பயனடையப் போவதில்லை. சாகுபடி செலவு சுமாா் 8 சதவீதம் உயா்ந்துள்ள நிலையில் 4.41 சதவீதம்தான் கொள்முதல் விலையை மத்திய அரசு உயா்த்தி இருக்கிறது. 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புகளுக்கும் இந்த விலை உயா்வை வழங்கும் வகையில், மத்திய அரசு தளா்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசும் இதற்குரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், தமிழக கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 விலையாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும், இடைநிகழ் செலவுடன் ஊக்கத்தொகை எனும் நிலையில் டன் ரூ. 4,500 கிடைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பயணியிடம் அலட்சியம்: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: திருவாரூா் அருகே முன்பதிவு செய்த பயணியிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் அ... மேலும் பார்க்க

மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

திருவாரூா்: மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15 000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்

மன்னாா்குடி: குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15ஆயிரம் ஊக்க நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

திருவாரூா்: ஜமாபந்தி இன்று தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

திருமக்கோட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குட்பட்ட மேலநத்தம்,திருமக்கோட்டை எரிவாயு சுழற்சி நிலைய உயா்மின் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். துளசேந்திரபுரம் நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் அஜித் (26). அதே பகுதியைச... மேலும் பார்க்க