செய்திகள் :

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவில் சிக்கிய இருவரிடம் போலீஸாா் விசாரணை!

post image

நாமக்கல்லில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல், முல்லை நகா் பகுதியில் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை காலை இறந்து கிடந்தாா். அவ்வழியாக சென்றோா் அளித்த தகவலின்பேரில் நாமக்கல் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

அதில், அவா் நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டி கணபதி நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் மனோ (19) என்பதும், தனியாா் கல்லூரியில் கணினி அறிவியல் 2-ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், வியாழக்கிழமை இரவு வீட்டைவிட்டு சென்ற இவா் வீடுதிரும்பாத நிலையில், மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

அவரது கைப்பேசியில் இறுதியாக பதிவான அழைப்புகளைக் கொண்டும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டும் போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், மனோ கொலையாவதற்கு முன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அவரை அழைத்துச்சென்றது பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீஸாா் இருவரிடம் விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் ம... மேலும் பார்க்க

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க