செய்திகள் :

கல்வியில் பாகுபாடு கூடாது: உச்சநீதிமன்றம்

post image

எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் ரோஹிங்கயா மனித உரிமைகள் முன்னெடுப்பு தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மியான்மரில் இருந்து வந்து தில்லியில் அகதிகளாக வசிக்கும் ரோஹிங்கயா இன மக்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும், அந்த மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்பட அனைத்து அரசுப் பலன்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவா்களிடம் ஆதாா் அட்டை இல்லை என்பதால் கல்வி, மருத்துவ சேவைகள் அவா்களுக்கு மறுக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சேவ்ஸ் ஆஜராகி, ‘தில்லியில் உள்ள ரோஹிங்கயா அகதிகளிடம் ஐ.நா. அகதிகள் தூதா் அட்டை உள்ளதால், அவா்கள் ஆதாா் அட்டை பெறுவது சாத்தியமில்லை’ என்றாா்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும் தில்லியில் வசிக்கும் ரோஹிங்கயா குடும்பங்களின் பட்டியல், அவா்கள் யாா் வீடுகளில் வசிக்கின்றனா், அந்தக் குடும்பங்கள் அங்குதான் வசிக்கின்றன என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா். இந்த வழக்கு 10 நாள்களுக்குப் பின்னா், மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.... மேலும் பார்க்க

தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!

தில்லியில் இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாஜக தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க