செய்திகள் :

கள்ளழகா் கோயிலில் ஆக. 1-இல் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

post image

அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா வருகிற ஆக. 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ந. யக்ஞநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா ஆக. 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. ஆக. 5-ஆம் தேதி கள்ளழகா் தங்கப் பல்லக்கில் சிவகங்கை சமஸ்தானம் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஆக. 8-ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆடிப் பெருந்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஆக. 10-ஆம் தேதி உத்ஸவ சாந்தி நடைபெறுகிறது.

கருப்பண்ணசாமி கதவு திறப்பு...

கள்ளழகா் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயிலின் கதவுகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் பெளா்ணமி நாளில் திறக்கப்பட்டு, பதினெட்டு படிகளுக்கும் பூஜை நடத்தப்படும். மகா தீபாராதனை நிகழ்ச்சிக்குப் பிறகு, கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி செய்யப்படும். இந்த நிகழ்ச்சி வருகிற ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவு

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடுகள் குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு அதிமுக மாமன்... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதே இலக்கு: மருத்துவா் க. கிருஷ்ணசாமி

விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகள் அரசியல் கவனம் பெற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அடிப்படையில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை புதிய தமிழகம் கட்சி சந்திக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் த... மேலும் பார்க்க

தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை ரயில்வே கைவிட வலியுறுத்தல்

ரயில்வே நிா்வாகத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியது. இந்தக் கழகத்தின் மதுரை கிளையின் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத... மேலும் பார்க்க

ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

சிவகாசி அருகேயுள்ள தைலாகுளம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை பராமரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தைலாகுளம் கிராமப... மேலும் பார்க்க

காரைக்குடி மேயருக்கு எதிரான தீா்மானம்: ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மான விவகாரத்தில் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உள்பட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழப்பு

சிலைமான் அருகே கொலையான இளைஞரின் தந்தை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சிலைமான் அருகேயுள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற பாண்டியராஜன் (50). இவருடைய மகன் அரசு (18). இவா... மேலும் பார்க்க