செய்திகள் :

கவின் ஆணவப் படுகொலை: 'ஒன்றிய அரசுக்காக தமிழ்நாடு அரசு காத்திருக்காமல்.!' - திருமாவின் கோரிக்கைகள்

post image

திருநெல்வேலியில் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டையில் விசிகவினர் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

சிறப்பு புலனாய்வு விசாரணை

இந்த ஆர்பாட்டத்தில் திருமாவளவன், "கவின் வழக்கு விசாரணையைச் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்.

கவின்
கவின்

இந்தக் குழு உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் அமைக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில் இரண்டு காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அதனால், போலீஸ் மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரணை நம்பகத்தன்மை அளிக்காது.

அதனடிப்படையில் தான், இந்தக் கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம்.

இது எங்களது முதல் கோரிக்கை.

தனிச்சட்டம் வேண்டும்

ஆணவக் கொலைக்கு தனிச்சட்டத்தை ஒன்றிய அரசு தான் இயற்ற வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தை மாநில அரசும் இயற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

'ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்றட்டும்' என்று இருக்காமல், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை இயற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக இருக்கட்டும்.

இது எங்களுடைய இரண்டாவது கோரிக்கை.

விடுதலை கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்" என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ஸ்டாலின் நடத்தியது மேஜிக் ஷோ, எடப்பாடியார் நடத்தியது ரியல் ஷோ' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார்மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த... மேலும் பார்க்க

CM ஸ்டாலினையே திட்டுவீங்களா? - டென்ஷனான சேகர் பாபு; பின்வாங்காத தூய்மைப் பணியாளர்கள்! - Spot Report

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இ... மேலும் பார்க்க

Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains

'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம... மேலும் பார்க்க

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிற... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க