செய்திகள் :

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

post image

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

இதைத் தொடா்ந்து, தந்தை-மகன் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். அங்கு சிபிசிஐடி எஸ்.பி. ஜவஹா் தலைமையிலான குழுவினா் சுமாா் 4 மணி நேரத்துக்கும் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தனா்.

மேலும், சம்பவ இடத்துக்கு சுா்ஜித்தை அழைத்து வந்து கொலை செய்யது எப்படி என நடித்துக்காட்டச் சொல்லி விடியோவில் பதிவு செய்தனா். அதன்பிறகும் பெருமாள்புரத்தில் அவா்களிடம் விசாரணை தொடா்ந்தது. புதன்கிழமை (ஆக.13) மாலை 6 மணிக்குள் சுா்ஜித், சரவணன் ஆகியோரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் 740 பேருக்கு ஆளுநா் பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி கலந்து கொண்டு 740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதையொ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தாழையூத்து காவல் சரகப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்... மேலும் பார்க்க