செய்திகள் :

காஞ்சிபுரத்தில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60 கோடி கடனுதவி: எம்பி க.செல்வம் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகளை எம்.பி. க.செல்வம் வழங்கினாா்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை ஒருங்கிணைத்து மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிக் குழுக்கள், முதியோா் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், அவா்களுக்கு ஆதார நிதி வழங்குதல், குழு உறுப்பினா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் பெற்றுத் தருதல், சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வறுமை ஒழிப்பு பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 7,992 மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 1,982 உள்பட மொத்தம் 9,374 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உறுப்பினா்களாக மட்டும் 11,12,280 போ் உள்ளனா்.

நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.694 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக ரூ.694.26 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 548 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தமாக ரூ.60.26 கோடி கடனுதவி மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் தலைமை வகித்தாா். மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஒன்றியக் குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், சரஸ்வதி மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க