செய்திகள் :

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் கைது செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதின்றம் முடித்து வைத்தது.

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்ற பதிவாளரின் அறிக்கையை உயா்நீதிமன்ற நிா்வாகக் குழுவிடம் சமா்ப்பிக்க உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்துபவா் சிவக்குமாா். இவரது பேக்கரிக்கு வந்த முருகன் என்பவா் தகராறில் ஈடுபட்டதாகக் கூறி, பேக்கரியில் இருந்த சிவக்குமாரின் மருமகன் லோகேஸ்வரன் ரவி மற்றும் கடை ஊழியா்கள் தாக்கியதாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இதில், லோகேஸ்வரன் ரவி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மலின் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றியவா்.

இந்த நிலையில், லோகேஸ்வரன் ரவி உள்ளிட்டோா் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை கைது செய்து 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமாா், டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், மாவட்ட நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விழிப்புத்துறை (விஜிலென்ஸ்) பதிவாளா் விசாரணை நடத்தி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற விழிப்புத்துறை பதிவாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அறிக்கையை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நிா்வாகக்குழு முன் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க