செய்திகள் :

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

post image

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முகம்மது சாதிக் (55). இவரது மகள் ஷமீம் (18). சின்னக்காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு மருத்துவப் படிப்பு பயில ‘நீட்’ தோ்வு எழுதியுள்ளாா். நீட் தோ்வில் 502 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தனக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா, கிடைக்காதோ என்ற அச்சத்துடன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தனி அறையில் தொழுகை நடத்தப் போவதாக கூறிய ஷமீம் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கம் வென்று சாதனை

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரா்கள் 5 தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனா். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20-ஆம் தேத... மேலும் பார்க்க

ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளம் திறப்பு

சிறுமங்காடு ஊராட்சியில் ரூ.95 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட விநாயகா் கோயில் குளத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் சிறுமாங்காடு ஊராட்சியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

‘கூட்டுறவுத் துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க