செய்திகள் :

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்

post image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

கோடைக் காலத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உற்சவா் காமாட்சி ஆலய வளாகத்தில் உள்ள வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்துக்கு எழுந்தருள்வது வழக்கம். நிகழாண்டுக்கான வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியதையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.

சுழலும் வண்ண மின் விளக்குகள், வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளால் வசந்த மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவா் காமாட்சி அம்மன் வேதபாராயணம் மற்றும் கோயில் ஸ்தானீகா்களால் மந்திர புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாயவரம் ராகவன் காமாட்சி விலாசம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து காமாட்சி அம்மன் கோயில் ஆஸ்தான வித்வான் தேசூா் ராஜரெத்தினம் மற்றும் காரைக்கால் வெங்கட சுப்பிரமணியனின் வயலின் இன்னிசை நடைபெற்றன.

வசந்த உற்சவத்தில் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், கோயில் மணியக்காரா் சூரியநாராயணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 13) வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளித் தலைமையாசிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மாணவியின் பெற்றோரை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை கண்டித்து வெள்ளிக்கிழமை இருளா் பழங்குடியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் கே.செல்வம் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க