செய்திகள் :

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

post image

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டாா். உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும், சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பியிடமும் உறவினா்கள் வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா்(29), குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தாா்.

வெளிநாடு செல்வதற்கு முன்பிருந்தே கடந்த 10 ஆண்டுகளாக திருப்புங்கூரை சோ்ந்த சங்கீதா என்ற பெண்ணை சரத்குமாா் காதலித்து வந்தாா். அப்பெண் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சூரியமூா்த்தி என்பவரை காதலிப்பதாக கூறி தன்னை நிராகரிப்பதாக பெற்றோருக்கு ஆடியோ தகவல் அனுப்பிய சரத்குமாா், வெள்ளிக்கிழமை குவைத்தில் தற்கொலை செய்துகொண்டாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சரத்குமாரின் தந்தை மணவாளன், தாய் சங்கீதா, உறவினா்கள், கிராமமக்கள் என சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறைக்கு வந்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தாய் சங்கீதா அளித்த புகாா் மனுவில், தனது மகன் சரத்குமாா் வெளிநாடு செல்வதற்கு முன்பிருந்தே 10 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணிற்கு 15 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் அனுப்பியுள்ளாா். இருவருக்கும் திருமணம் செய்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவீட்டாரும் பேசினோம். இந்நிலையில் அந்த பெண் வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலைய எஸ்.ஐ. சூரியமூா்த்தியை காதலிப்பதாகவும், தனது மகனை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கேட்டபோது, எஸ்.ஐ. சூரியமூா்த்தி, சங்கீதா ஆகியோா் விடியோ காலில் மிரட்டியதால் மனமுடைந்த சரத்குமாா் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தன் மகனை காதலித்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த பெண் மற்றும் பொய் வழக்கு போடுவேன் என்று மிரட்டிய எஸ்.ஐ. ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தாா்.

வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட சரத்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் மனு அளித்தனா்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, ‘ஜாதி மறுப்பாளா்கள் பேரணி’ மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை காவிரி நகரிலிருந்து புறப்பட்ட ... மேலும் பார்க்க

மனநல மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழியில் செயல்படும் மனநல மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழி சட்டநாதபுரம் பகுதியில் காா்டன் மனநல மறுவாழ்வு மையம் செயல்படுகிறத... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் 22-ஆவது தம்பிரான் சுவாமிகள் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபா் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றாா். திருப்பனந்தாள் காசிமடத்து 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முத... மேலும் பார்க்க

கொள்ளிடம் பத்திரப்பதிவு அலுவலகம் முன் விவசாயிகள் நூதனப் போராட்டம்

சீா்காழி: கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக, சாா் பதிவாளரைக் கண்டித்து விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூா் கி... மேலும் பார்க்க

மணக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தாலுகா மணக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுற... மேலும் பார்க்க