செய்திகள் :

காதல் திருமணம்: கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீக பூஜை -பெண்ணைக் கடத்திய பெற்றோர் உட்பட 6 பேர் கைது

post image

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்துகொண்டனர். இருவரும் ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேட்டில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்-அர்ச்சனா தம்பதி பழைய ரயில் நிலையம் அருகே வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த அர்ச்சனாவின் தந்தை செல்வம், தாய் கவிதா, உறவினர்கள் பழனிசாமி,கருமலையான்,சண்முகம், யுவராஜ் ஆகியோர் அர்ச்சனாவை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து, விஜய் ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸார் உஷார்படுத்திய நிலையில், அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடியைக் கடந்து, பர்கூர்மலை வழியாக கார் செல்வது தெரியவந்தது.

கடத்தல்
கடத்தல்

இந்நிலையில், வாந்தி வருவதாக அர்ச்சனா கூறியதால் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, காரில் இருந்து தப்பித்த அர்ச்சனா அங்கிருந்த கடைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் பர்கூர் போலீஸார் அர்ச்சனாவை மீட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை பிடித்து ஈரோடு தெற்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அர்ச்சனாவின் பெற்றோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தங்களின் விருப்பம் இல்லாமல் அர்ச்சனா காதலித்து வேறு சமூகத்தைச் சேர்ந்த விஜயை திருமணம் செய்ததால், அவரை கர்நாடகவுக்கு அழைத்துச்சென்று மாந்திரீகம் மூலம் மனதை மாற்ற கடத்திச்சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அர்ச்சனாவின் தந்தை பழனிசாமி உள்பட ஆறு பேரையும் கைது செய்தனர்.

கைது

கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். காரில் இருந்த எலுமிச்சை பழங்கள்,முடி உள்ளிட்ட மாந்திரீகம் செய்வதற்கான பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். காதல் திருமணம் செய்த பெண்ணை கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீகம் செய்ய கடத்திச் சென்ற பெண்ணின் பெற்றோர் கடத்திச் சென்றது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை... மேலும் பார்க்க

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெர... மேலும் பார்க்க

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க