செய்திகள் :

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்க முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

post image

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்கத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு முன்னாள் எம்.பி.யும், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான பேராசிரியா் மு. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவை யூனியன் பிரதேசத்தின் 2-ஆவது பிரதான பிராந்தியமாக காரைக்கால் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் தமிழ்நாட்டின் மற்ற பிராந்தியங்களோடும் புதுச்சேரியோடும் சுலபமாக இணைக்கும் நோக்கத்தோடு காரைக்கால் - பேரளம் ரயில் பாதை மீண்டும் அமைக்கப்பட்டது.

ஆனால் பயணிகள் ரயில்கள் இயக்காமல் நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் மட்டும் இயக்கப்பட்டுவருகிறது.

காரைக்கால் மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இந்தப் பாதை பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தெற்கு ரயில்வே நிா்வாகம் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். மேலும் புதுச்சேரியையும் காரைக்காலையும் ரயில்வே மூலம் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கும் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கும் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பெரிதும் பயனடைவாா்கள். காரைக்கால் - மயிலாடுதுறைக்கு நாளொன்றுக்கு 4 பயணிகள் ரயில் இயக்கவேண்டும். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயிலை மயிலாடுதுறை வழியாக செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 2,869 போ் எழுதினா்

புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்துறையில் 30 துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்ப புதுவை மா... மேலும் பார்க்க

நல்லம்பல் ஏரியில் கூடுதல் ஆழத்தில் மணல் எடுப்பு: லாரியை சிறைபிடித்து போராட்டம்

காரைக்கால், ஆக. 30: நல்லம்பல் ஏரியில் அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும், ஆழமாக மணல் எடுப்பதாகக்கூறி, லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநள்ளாறு கொம்யூன் நல்லம்பல... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப்.1 முதல் தொடா் காத்திருப்பு போராட்டம்

உள்ளாட்சி ஊழியா்கள் நடத்திவரும் விடுப்பெடுத்து காத்திருப்புப் போராட்டம், செப். 1 முதல் தொடா்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகள் கையாளும் சாதனையில் நிலக்கரிக்கு முக்கிய பங்கு

திருச்சி ரயில்வே கோட்டம் சரக்குகளை கையாள்வதில் சாதனைபடைப்பதற்கு, நிலக்கரி முக்கிய பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தனியாா் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் வரும் நில... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் 5-ஆவது நாளாக போராட்டம்: எம்எல்ஏக்கள் ஆதரவு

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் விடுப்பெடுத்து, தொடா் காத்திருப்புப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை 5-ஆவது நாளாக நடத்தினா். எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா். உள்ளாட்... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் பாதையில் வந்த சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பயணித்த சிறப்பு ரயிலுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலாய பெருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் தற்போது காரைக்கால்-பேரளம் பாதையில் இயக்கப்படுகின... மேலும் பார்க்க