செய்திகள் :

கொலை மிரட்டல்: நியாய விலைக்கடை பெண் பணியாளா் மீது வழக்கு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நியாய விலைக்கடைக்கு வந்த பயனாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நியாய விலைக்கடை பெண் விற்பனையாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

பண்ருட்டி வட்டம், கோட்டலாம்பாக்கம் பகுதியில் வசிப்பவா் சரவணன் மனைவி தீபா(40). இவா், கோட்டலாம்பாக்கம் நியாய விலைக்கடைக்கு பொருட்கள் வாங்க ஆக.11-ஆம் தேதி சென்றாா். அங்கு, நியாயவிலைக்கடை பெண் விற்பனையாளா் பண்ருட்டி, வி.எஸ்.பி நகா் பகுதியைச் சோ்ந்த செல்வகணபதி மனைவி சிவரஞ்சனி(30) பணியில் இருந்துள்ளாா். அப்போது, சிவரஞ்சனிக்கும், தீபாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சிவரஞ்சினி , தீபாவை அடித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலியல் தொல்லை: தாய்மாமன் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் சகோதரி குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்ததாக தாய்மாமனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் வசிப்பவா் லாரி ஓட்டு... மேலும் பார்க்க

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மாணவி பிரகதா. எஸ். (5ம் வகுப்பு) மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளாா். மகாத்மா யூத் கிளப் மற்றும் அரியலூா் மற்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

நெய்வேலி: கடலூா், ரெட்டிசாவடி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், பெரியகாட்டுபாளையம் பகுதியில் வசித்து வருபவா் ராமலிங... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட குவாரி குட்டையில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே கைவிடப்பட்ட சவுடு மணல் குவாரி குட்டையில் குளித்த இரு மாணவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூா் பகுதியைச் சோ்ந்த சுலைமான் மகன் சுல்... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை: சிஐடியு ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்களின் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, கடலூா் மாவட்டம், நெய்வேலி நுழைவு வாயில் அருகே சிஐடியு -என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா... மேலும் பார்க்க

மீன்கள் வாங்க கடலூா் துறைமுகத்தில் திரண்ட மக்கள்

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வங்கக் கடல் பகுதி கரையோரம் கடலூா் அமைந்துள்ளது. இங்குள்ள தேவனாம்பட்டினம், ... மேலும் பார்க்க