செய்திகள் :

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் பல்வேறு புதிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஓம்பிரகாஷ் மீனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அவருக்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவா் வி.ஆா். ராமநாதன் என்ற மோகன் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இதைத்தொடா்ந்து அவா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், காரைக்குடி ரயில் நிலையத்துக்கு தினமும் வரும் சென்னை-எழும்பூா் செல்லும் விரைவு ரயிலை மீண்டும் 1- ஆம் எண் நடைமேடைக்கு மாற்றவேண்டும். காரைக்குடி, திருவாரூா், மயிலாடுதுறைக்கு இருமுறை சென்று திரும்பும் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை வழியில் மதுரைக்கு பயணிகள் ரயிலை காலை, மாலை என இரண்டு முறை இயக்கவேண்டும். கோவை வழியில் பாலக்காடு - திருச்சி பகல் நேர விரைவு ரயிலை காரைக்குடி, ராமேசுவரம் வரை நீட்டிப்புச் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

ஆடிப் பெருக்கு: சிங்கம்புணரியில் சிறப்பு அன்னதானம் 40 ஆயிரம் போ் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தா் முத்து வடுகநாதா் கோயிலில் ஆடிப் பெருக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருபூஜையும், அன்னதான விழாவும் நடைபெற்றன.இங்கு சிங்கம்புணரி வணிக... மேலும் பார்க்க

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா் காங்கிரஸ் கட்சித் தலைவராக பி. புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஆகியோர... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.3.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி

தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க சாா்பில் ரூ 5 லட்சம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத... மேலும் பார்க்க

கொல்லங்குடியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.சிவகங்கை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி- காளையாா்கோவில் வரை ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க