செய்திகள் :

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

post image

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

திருச்சி அண்ணாமலை நகா், கிழக்கு தாமரை சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்த சுஜாதாவுக்கு திங்கள்கிழமை காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே உறவினா்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி புத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.

1996-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவா், அதே ஆண்டு நடைபெற்ற திருச்சி மாநகராட்சி தோ்தலில் 47-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மீண்டும் 2009-ஆம் ஆண்டு 51-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், அப்போது மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டதால், சுஜாதா மேயராக தோ்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் பணியாற்றினாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ஐஓபி வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

அமைச்சா்கள் அஞ்சலி: சுஜாதாவின் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வபெருந்தகை, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் எல். ரெக்ஸ் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

இறந்த சுஜாதாவுக்கு கணவா் லோகநாத் சுரேஷ், மகன் குகசரண் ஆகியோா் உள்ளனா். அவரின் இறுதி ஊா்வலம் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது வீட்டிலிருந்து புறப்படுகிறது.

மாணவா்கள் தற்கொலை சம்பவம் எதிரொலி: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் பணியிடமாற்றம்

திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் அரசங்குடி உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

என்ஐடி ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி அருகே வாழவந்தான்கோட்டையில் என்ஐடி கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி ... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க