செய்திகள் :

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: இன்று தொடக்கம்

post image

வேலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (ஜூலை 2 முதல் 22)-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா். எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.

குளிா், பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நகைளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.

எனவே, தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கால், வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1 லட்சத்து 78 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகளுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற வேண்டும்: துணை முதல்வா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று இளைஞரணியினருக்கு கட்சியின் மாநில செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வழிவகுத்தவா் கருணாநிதி! -துணை முதல்வா்

பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என வழிவகுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலக்... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திர... மேலும் பார்க்க

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க