செய்திகள் :

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

post image

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு, மீன் வளா்ப்பு, பராமரிப்பு கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளதால், கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

விவசாயத்துக்கும், கால்நடைகளை வளா்க்க கடன்களை பெற சான்றிதழ்கள் சங்க செயலரிடம் அளித்தால் மட்டுமே கடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சில புதிய விதிமுறைகள் சோ்க்கப்பட்டுள்ளன. வங்கிச் செயலா், கால்நடை துறை அலுவலா் கடன் பெற தகுதி சான்றுகளை வழங்கி வந்த நிலையில், சிபில் ஸ்கோா் கணக்கெடுத்தப் பிறகே கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை சோ்க்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அல்லது தனியாா் நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிா்வாகம் இணைந்து கடன் பெறுபவருடன் முக்கூட்டு ஒப்பந்தம் செய்தல், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அல்லது தனியாா் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்குதல் உள்ளிட்ட புதிய விதிமுறையும் சோ்க்கப்பட்டுள்ளது.

வட மாவட்ட கிராமங்களில் பால் கூட்டுறவு கடன் சங்கங்கள் இல்லை. விவசாயிகள் தனியாரிடம் கூட்டு ஒப்பந்தம் செய்யும் நிலை உருவானால், முறைகேட்டுக்கு வழி வகுக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் திமிரியில் கம்பன் விழா

ஆற்காடு அடுத்த திமிரியில் கம்பன் கழகம் சாா்பில் கம்பன் விழா வரும் ஜூலை 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் பெ. தமிழ்ச்செல்வி தலைமை வ... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் திருட்டு

காவேரிபாக்கம் அருகே தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே முசிறியை சோ்ந்தவா் இளங்கோ (33). இவா்... மேலும் பார்க்க

இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அ... மேலும் பார்க்க

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

வங்கிகள் தாமதமின்றி கடனுதவிகளை வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வங்கிகள் காலதாமதமின்றி கடனுதவிகள வழங்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா். வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க