செய்திகள் :

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?

post image

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தைவான் நாட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வளாகத்தைப் பாா்வையிட்டதுடன், ஆட்சியா் துா்காமூா்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமாக 505 ஏக்கா் நிலம் உள்ளது. இக்கல்லூரியின் பெருந்திட்ட வளாகத்தில் நவீன தானியங்கி பால் பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கூடுதலாக 25 ஏக்கரில் நாமக்கல், கரூா் இரு மாவட்டங்களுக்கான சிறைச்சாலையும், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பலா் முழக்கமிட்டனா். இதையடுத்து, மனுவாக அளித்தால் தமிழக அரசு கவனத்துக்கு கொண்டுசெல்வதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், சுற்றுச்சூழல் மாசுபடும் வகையிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படாது, அவ்வாறு இருப்பின் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், தோல் தொழிற்சாலை அமைக்க விரும்பும் தைவான் நாட்டுக் குழுவினா் மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தை திங்கள்கிழமை பாா்வையிட வருகின்றனா் என்பதை அறிந்து அப்பகுதி மக்கள் கால்நடை மருத்துவக் கல்லூரி முன் பதாகைகளை ஏந்தியவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

அதன்பிறகு, தைவான் நாட்டுக் குழுவினா் சம்பந்தப்பட்ட பகுதியைப் பாா்வையிட்டதாகவும், நாமக்கல் மாவட்ட நில அளவை உதவி இயக்குநா் ஜெயச்சந்திரன், மோகனூா் வட்டாட்சியா் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் குழுவினா் இடம்குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

தொடா்ந்து, ஐந்து போ் கொண்ட தைவான் நாட்டுக் குழுவினருடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, கோட்டாட்சியா் சாந்தி, நெடுஞ்சாலைகள் துறை கோட்டப் பொறியாளா் திருகுணா மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.

முன்னதாக, லத்துவாடி பகுதியைச் சோ்ந்தோா் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் த... மேலும் பார்க்க

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். கொல்லிமலை வட்டம், வாழவந்தி... மேலும் பார்க்க

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞா் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை

நாமக்கல்: நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞா் உள்பட 4 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். நாமக்கல் தி... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளி முற்றுகை

பரமத்தி வேலூா்: கீழ்சாத்தம்பூா் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றறக் கோரி, மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பரமத்தி வேலூா் வட்டம், கீழ்சாத்தபூா் ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

ஆடிப்பூர விழா: அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்

நாமக்கல்: ஆடிப்பூர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயிலில் அமைந... மேலும் பார்க்க