செய்திகள் :

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை

post image

திருவண்ணாமலையில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கான உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

ஸ்ரீபச்சையம்மன் கோயில் வளாகத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, அறநிலையத் துறை ஆய்வாளா் செ.மாதவன் தலைமை வகித்தாா்.

ஆய்வாளா் உ.சத்யா, இரா.நடராஜன், சி.கா.அன்பழகன் ஆகியோா் நல வாரியத்துக்கான புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா்.

முகாமில், கோயில் அா்ச்சகா்கள், பூசாரிகள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பப் படிவங்களை பெற்று புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். முகாமில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா்கள் மு.சிலம்பரசன், கோ.ராகினி, ம.சிவாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என புகாா் தெரிவித்து செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயிகள் உள்ளிருப்புப் போ... மேலும் பார்க்க

செங்கம்: இரவு நேரத்தில் தனியாகச் செல்பவா்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள்

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் தனியாகச் செல்பவா்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - பெங்களூரு ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் தீக்குளிக்க முயற்சி

ஆரணியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பணிச்சுமை காரணமாக செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயற்சித்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி. இவா், அரசுப் போக்குவரத்துக்கழக ஆரணி ... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, வந்தவாசி, செங்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசை வழிபாடு திங்கள்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளபரம... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்ட வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலைத் துறை இடத்தில் கட்டப்பட்டிருந்த விவசாயின் வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது. சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்டத்தில் கோடை... மேலும் பார்க்க