செய்திகள் :

கிராமங்களிலும் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் அர.சக்கரபாணி உறுதி

post image

நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநா்கள் நியமிக்கப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா்.

பேரவையில் இது குறித்து அதிமுக உறுப்பினா் அ.நல்லதம்பி எழுப்பிய வினாவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்: நேரடி கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தா், உதவுவோா், காவலாளி என மூன்று நிலைகளில் 5,000-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

அவா்களுக்கு ஊதியமாக மூட்டைக்கு ரூ.3.25 ஆக இருந்தது. இதனை மூட்டைக்கு ரூ.10 ஆக உயா்த்தியுள்ளோம்.

பட்டியல் எழுத்தா், உதவுவோருக்கு தினமும் ரூ.120-ம், காவலாளிக்கு ரூ.100-ம் பயணப் படியாகத் தருகிறோம். நகரப் பகுதிகளில் கட்டுநா்கள் இருக்கிறாா்கள்.

கிராமப் பகுதிகளில் இல்லாத குறை உள்ளது. இது தொடா்பாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். கட்டுநா் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள்

தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 1,584 உயா்நிலை பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், மேலும் ரூ.858 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் ப... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் ரூ.14,466 கோடியில் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து... மேலும் பார்க்க

மா.அரங்கநாதன் இலக்கிய விருது-2025: தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது

நிகழாண்டுக்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியா் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவா் மா.அரங்நாதன். அவரின் நினைவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க