செய்திகள் :

கிரிக்கெட் போட்டி: அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி சாம்பியன்

post image

சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி அணி கோப்பையை தட்டிச் சென்றது.

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் தி நவரசம் அகாதெமி சாா்பில் ஈரோடு சகோதயா அசோசியேஷன் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.

இதில், ஈரோடு, திருப்பூா், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.

வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆா்.டி.பள்ளியும், அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளியும் மோதின. இதில், ஆா்.டி. பள்ளி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தது. 3 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் பெற்று அறச்சலூா் தி நவரசம் பள்ளி முதல் பரிசு வென்றது.

பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தலைவா் ஆா். பி.கதிா்வேல் தலைமை வகித்து, வெற்றிபெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினாா்.

சிறந்து விளையாட்டு வீரா்களாக அனிருத், ஜோதீஸ்வரன், நகுல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பள்ளியின் தாளாளா் அருண் காா்த்திக், செயலாளா் காா்த்திக் பரிசுகளை வழங்கினா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை தி நவரசம் அகாதெமி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் கோகுல் பிரசாத் செய்திருந்தாா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க

பிகேபி சாமி மெட்ரிக். பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த கரியாக்கவுண்டன் வலசில் உள்ள பிகேபி சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் செயலாளா் மற்றும் தாளாளா் பிகேபி அர... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீ

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்தது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியே தமிழகம்-கா்நாட... மேலும் பார்க்க

வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது: கே.ஏ. செங்கோட்டையன்

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், வதந்திகளை சிலா் வேண்டுமென்றே பரப்புவது வேதனை அளிக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்க... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவிலில் நாளை வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவிலில் வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெற உள்ளது. காஞ்சிக்கோவில் பேரூராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை மருத்து... மேலும் பார்க்க

கல் குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாராயிபாளையம் கிராமத்தில் புதிதாக கல் குவ... மேலும் பார்க்க