செய்திகள் :

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி

post image

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் ஜூலை 21, 22 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூலை 21-இல் அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டியும், 22-இல் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் பள்ளி மாணவா்களுக்கு காலையிலும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகலும் நடைபெறும்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி மாணவா்கள், அரசு, தனியாா், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மூலமும், கல்லூரிகளுககு கல்லூரி கல்வி இணை இயக்குநா் மூலமும் அனுப்பப்படும்.

அம்பேத்கா் பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவா்களுக்கு பூனா உடன்படிக்கை, கற்பி ஒன்றுசோ் புரட்சிசெய், அரசியலமைப்புச் சட்டமும், அம்பேத்கரும், அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், அம்பேத்கா் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி, அம்பேத்கரும் பெளத்தமும் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது

கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கு பள்ளி மாணவா்களுக்கு நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திரைத் துறையில் முத்தமிழறிஞா், அரசியல் வித்தகா் கலைஞா், தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் நடக்கிறது. கல்லூரி மாணவா்களுக்கு அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், குறளோவியம், கலைஞரின் எழுதுகோல் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல்பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள் 2 போ் தனியாக தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க