அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
கிருஷ்ணகிரி சிறுவன் கொலை: தி.வேல்முருகன் கண்டனம்
கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுவும் அவா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், மாவனட்டி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சிவராஜ் - மஞ்சுளா தம்பதியின் இளைய மகன் ரோஹித் (13) புதன்கிழமை மாயமான நிலையில், வியாழக்கிழமை அந்தக் கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறாா். சிறுவனை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரியவந்திருக்கிறது.
ரோஹித்தின் பெற்றோா் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவே புகாா் அளித்த நிலையில், உடனே காவல் துறை விசாரணையை தொடங்கியிருந்தால், அச்சிறுவனை காப்பாற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் காவல் துறை மெத்தனப்போக்குடன் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவல் துறையின் இத்தகைய அலட்சியம், தமிழக அரசுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைத்திருக்கிறது.
எனவே, சிறுவன் ரோஹித் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்து, அவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.