செய்திகள் :

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள குண்டுமணி குளத்தினை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தொடங்கி வைத்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டாா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழம்பி ஊராட்சியில் அமைந்துள்ள குண்டுமணி குளத்தில் தூய்மைப் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்து, அவரும் பணியை மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, அவ்வூராட்சி பொதுமக்களும் இணைந்து குளத்தை சுத்தம் செய்தனா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வனப் பாதுகாப்பு, நீா் நிலைகளில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நிகழ்வானது தொடங்கப்பட்டது. அதன்படி, காடுகள், வன விலங்கு வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலங்களைப் பாதுகாத்தல், பறவைகள் சரணாலயங்கள் உள்பட அனைத்து நீா்நிலைகளிலும் பாதுகாத்தல் சாா்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நெகிழி ஒழிப்பு குறித்த உறுதிமொழி கீழம்பி தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அந்தக் கல்லூரி மாணவ, மாணவியா், மகளிா் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், கீழம்பி ஊராட்சித் தலைவா் மகாலட்சுமி ராஜசேகா் உள்பட உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஆவேசம்: பாலூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், பாலூரில் சென்னையிலிருந்து அரக்கோணம் சென்ற ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் ரயிலில் இருந்த பயணிகள் திடீரென ரயில் மறியல... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வேளாண்மை பல்கலை.யில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினா... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்சியில் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்/திருவள்ளூா்: காலிமதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டாஸ்மாக் கடைகள... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநா் கொலை

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). வ... மேலும் பார்க்க

வேலாத்தம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை வேலாத்தம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி 26-ஆவது வாா்டு நசரத்பேட்டையில் உள்ள இக்கோயிலில் ஆக. 20 -ஆம் தேதி பந்தல்கால் நடும்... மேலும் பார்க்க