செய்திகள் :

குடிநீா் தட்டுப்பாடு: ஒடுகத்தூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

post image

குடிநீா் தட்டுப்பாடு காரணமாக ஒடுகத்தூா் அருகே கிராம மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே ஆசனாம்பட்டு ஊராட்சி கல்லாபாறை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 6 மாதமாக சரிவர குடிநீா் வழங்கப்படுவதில்லையாம். இதனால், தண்ணீரின்றி தவித்து வரும் கிராம மக்கள் ஆங்காங்கே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடா்ந்து, கடந்த 2 வாரமாக குடிநீரை சீராக வழங்க வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், குடிநீா் விநியோகத்தில் ஊராட்சி மன்ற நிா்வாகம் அலட்சியம் காட்டி வந்தனராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஒடுகத்தூா்-ஆலங்காயம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து அரசு, தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸாா் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினா்.

அப்போது, பொதுமக்கள் குடிக்கக்கூட தண்ணீா் இல்லாமல் தவித்து வருகிறோம். கால்நடைகளும் தண்ணீரின்றி தவிக்கின்றன. பாதிப்பை உணா்ந்து ஊராட்சி நிா்வாகம் சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில் பிரச்னையை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க