செய்திகள் :

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 52 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 17 பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவை விருதுநகா், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.

பெரிய பேருந்துகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு, புதிய பேருந்து வழிதடம் அமைத்து சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.மனோதங்கராஜ், செ.ராஜேஷ்குமாா், ஜே.ஜி.பிரின்ஸ், தாரகைகத்பா்ட், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் மொ்லின்ஜெயந்தி, துணைமேயா் மேரிபிரின்சிலதா, போக்குவரத்துக் கழக துணை மேலாளா்கள் ஜெரோலின், சுனில்குமாா், அழகேசன், தொழிற் சங்க தலைவா் சிவன், மாநகராட்சி உறுப்பினா்கள் கலாராணி, அமலசெல்வன், ஸ்டாலின்பிரகாஷ், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க