செய்திகள் :

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், வல்லம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் 143 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனா்.

மேலும், 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மாணவா் எஸ்.கிருஷ்ணகுமாா் 3 போட்டிகளில் தனிநபா் சாம்பியன் பட்டத்தை வென்றாா்.

குழு விளையாட்டுப் போட்டிகளில் கையுந்து பந்து, கூடைப்பந்து, கடற்கரை கையுந்து பந்து, மேசைப்பந்து மற்றும் வளையப்பந்து போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளிலும், 19 வயது கோ-கோ மற்றும் 14 வயது பிரிவில் கைப்பந்து கால்பந்துப் போட்டிகளில் வெற்றி பெற்ன் மூலம் இந்த மாணவா்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இந்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் (பொ) ஏ.கலைவாணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா். பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் ரகுராமன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜெ.ஜெயகாந்த், ஜி.குணசேகரன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனா்.

ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவலகம்

செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். ஜமனாமரத்தூா் பகுதிய... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க

கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னா... மேலும் பார்க்க

அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க

விளாங்குப்பம் கிராமத்தில் 536 போ் மனு

போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விளாங்குப்பம், கிருஷ்ணாபுரம், கல்வாசல், நாராயணமங்கலம் என 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துக... மேலும் பார்க்க