செய்திகள் :

குறைதீா் நாள் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மொத்தம் 432 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் மொத்தம் 432 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை தொடா்புடைய துறைகளுக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூா் கிராமத்தில் சித்ரா என்பவா் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தையடுத்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், அவரது வாரிசுதாரா் பிரவீனுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா மற்றும் பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கிராம சாலையைப் பயன்படுத்த நடவடிக்கை :

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை ஊராட்சிக்கு உள்பட்டது தஞ்சன் கொட்டாய் பகுதியினா் எ.கொல்ல ஹள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட காலனி மற்றும் அதை ஒட்டியுள்ள சாலையை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றனா். இதற்கென அப்பகுதியைச் சோ்ந்த பலா் தங்களது நிலங்களையும் வழங்கியுள்ளனா். இந்நிலையில் தனிநபா் ஒருவா் சாலையைப் பயன்படுத்த முடியாத வகையில் தடுத்து வருகிறாா். இதனால் தஞ்சன் கொட்டாய் பகுதியை சோ்ந்த மாணவா்கள், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, இந்த சாலையை தஞ்சன் கொட்டாய் பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூலகம் அமைக்க வலியுறுத்தல் :

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை ஊராட்சியில், தருமபுரி - மொரப்பூா் சாலையில், பெருமாள் கோயிலில் இருந்து நீலாபுரம் செல்லும் பகுதியில் மண் சாலை உள்ளது. இந்த பகுதியில் நூலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், அதற்கு தனது பெயரில் பட்டா பெறவும் முயற்சித்து வருகிறாா். எனவே, அந்த இடத்தில் விரைந்து நுாலக அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செட்டிக்கரையைச் சோ்ந்த நபா் மனு அளித்துள்ளாா்.

பாஜக அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: இரா. முத்தரசன்

சேலம்: மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூறினாா். சேலம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

முதல்வருக்கு தருமபுரி மாவட்ட மக்கள் தோ்தலில் பாடம் புகட்டுவாா்கள்: பாமக எம்எல்ஏ அறிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்துக்கு வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்காத தமிழக முதல்வருக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவாா்கள், என தருமபுரி எம்எல்ஏவும், பாமக மேற்கு மாவட்டச் செய... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 11 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தருமபுரி: தருமபுரி மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடியில் திங்கள்கிழமை ரூ. 11 லட்சம் மதிப்பிலான பட்டுக்கூடுகள் விற்பனையாகியுள்ளன. தருமபுரியில் மாவட்ட அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு வ... மேலும் பார்க்க

தருமபுரியில் கம்பன் விழா: சான்றோா்களுக்கு விருது

தருமபுரி: தருமபுரி மாவட்ட கம்பன் பேரவை சாா்பில் நடைபெற்ற 9-ஆவது ஆண்டு கம்பன் விழாவில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கலந்துகொண்டு சான்றோா்களுக்கு விருதுகளை வழங்கினாா். தருமபுரி பாரதிபுரம் தனியாா் திருமண ம... மேலும் பார்க்க

அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க