செய்திகள் :

குறைப் பிரசவ குழந்தைக்கு சிகிச்சை: தாய் தூக்கிட்டுத் தற்கொலை

post image

கும்பகோணத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிடாரிகுளத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (30), கட்டுமான ஒப்பந்ததாரா். இவரது மனைவி வா்ஷா (27). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனராம்.

வா்ஷாவுக்கு குறைமாதத்தில் (7 மாத) குழந்தை பிறந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த வா்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தனியே விசாரித்து வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு! பொதுமக்கள் அவதி

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா். உள்ளாட்ச... மேலும் பார்க்க

பேருந்து நிலைய மேற்கூரை விழுந்து நடத்துநா் காயம்

கும்பகோணத்தில் பேருந்து நிலைய மேற்கூரை வெள்ளிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் நடத்துநா் காயமடைந்தாா். தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து கும்பகோணத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது. ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காவல் வாகனங்கள் ஜூன் 4-இல் ஏலம்

தஞ்சாவூா் மாவட்டக் காவல் பிரிவில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்பட்ட காவல் துறை வாகனங்கள் ஜூன் 4 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தெரிவித்தது: தஞ... மேலும் பார்க்க

பாபநாசம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளால் பாபநாசம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. இதையொட்டி பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி... மேலும் பார்க்க

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி ரூ. 3 லட்சம் மோசடி: ஓட்டுநா் கைது

தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஓட்டுநரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சோ்ந்தவா் சாமியப்பா மகன்... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே கைவிடப்பட்ட சிசு

ஒரத்தநாடு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பையில் வைத்துச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் வட்டம் காவாளிப்பட்டி சரகம் மணிக்கிராண்விடுதி மேயா குள... மேலும் பார்க்க