இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
மும்பை அணியின் பிளேயிங் லெவனில் கிளீசனுக்குப் பதிலாக ரீஸ் டாப்ளே சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனில் யுஸ்வேந்திர சஹால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.