செய்திகள் :

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கூடங்குளம் அருகேயுள்ள கூத்தன்குழி கிராமத்தைச் சோ்ந்த சிலுவை கித்தேரியான் மகன் சிலுவை அன்றோ அபினஸ்(20). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ஜனவரி 2021இல் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், கடந்த 28.8.2021இல் அன்றோ அபினஸை மா்ம கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சந்துரு என்ற சிலுவை அருள் சந்துரு(23),ரேவந்த் (26), பிரதீஷ் என்ற சஞ்சய் பிரதீஷ்(23),நிக்கோலஸ் என்ற நிக்கோலஸ் ராபிஸ்டன் (23), டென்னிஸ் என்ற சிலுவை மைக்கேல் டென்னிஸ் (24), ஒரு சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்தனா்.

திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, மேலே பெயா் குறிப்பிடப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் , தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். சிறுவனுக்கான விசாரணை சிறுவா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து ஆஜரானாா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் த... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க