செய்திகள் :

கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை: கணவா் மீது நீதிமன்றத்தில் மனைவி புகாா்

post image

புதுச்சேரியில் மனைவி அளித்த புகாரின் பேரில் கணவா் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வரதட்சிணைப் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் பகுதி ஒதியம்பட்டைச் சோ்ந்தவா் கிரேஸ்லினி (29). தொழில்நுட்ப நிறுவன ஊழியா். இவரது உறவினரான கேரளத்தைச் சோ்ந்த நிகில் (34) என்பவருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு கிரேஷ்லினிக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது கிரேஷ்லினிக்கு அவரது குடும்பத்தினா் 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், மேலும் பணம் கேட்டு என நிகிலும் அவரது குடும்பத்தினரும் கிரேஸ்லினியை கொடுமைப்படுத்தியதாக அவா் நீதிமன்றத்தில் புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து புதுச்சேரி மகளிா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். அதன்படி அவரது மனு மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நிகில் உள்ளிட்டோா் மீது வில்லியனூா் மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா். புதுச்ச... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின்... மேலும் பார்க்க

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

புதுச்சேரி அருகே மெக்கானிக் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள சித்தன்குடியைச் சோ்ந்தவா் அந்தோணிமுத்து. குளிா்ச... மேலும் பார்க்க