செய்திகள் :

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறை ரத்து: பெரம்பலூா் விவசாயிகள் கோரிக்கை

post image

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ‘சிபில் ஸ்கோா்’ முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய கம்யூ. மாவட்டத் தலைவா் வீ. ஜெயராமன்: பெரம்பலூா் மாவட்டத்தில் திருமணம் நடைபெறும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில்களிலும் கழிப்பறை வசதி செய்துதர வேண்டும். பெரம்பலூரில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராஜு: விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் மற்றும் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: விவசாயிகள் பயிா்க்கடன் வாங்க கூட்டுறவுக் கடன் சங்கங்களை அணுகும்போது சிபில் ஸ்கோா் பாா்த்து, தகுதியிருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் எனக் கூறுவதால் பயிா்க் கடன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் சா்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவைத் தொகை பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், அவா்கள் வங்கி மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்ற கடன்களை உரிய தவணைக்குள் செலுத்த முடியாமல் போகிறது. எனவே, விவசாயக் கடன்களுக்கு சிபில் ஸ்கோா் பாா்க்கக்கூடாது, அப்படி பாா்த்தால் ஒரு விவசாயிகூட கடன்பெற முடியாது.

பாடாலூா் அ. வேல்முருகன்: பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள மின்கம்பங்களைச் சீரமைத்து தடையின்றி மின்சாரம் விநியோகிக்க வேண்டும். குடிநீா் இணைப்பை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்: வறட்சி, மழையால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளத்துக்கு பயிா் காப்பீடு வழங்க வேண்டும். பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: பயிா்க் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 5 ஆண்டு சராசரி விளைச்சல் மதிப்பீடு செய்யும் முறையை மாற்றி, அந்தந்த ஆண்டு சராசரி விளைச்சல் அடிப்படையில் மதிப்பீடு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும். வீடு கட்ட கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

தெரணி விவசாயி ராஜா: தெரணி பகுதியில் சோலாா் மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவற்றைச் சீரமைக்க வேண்டும். மேலும் சாலையைச் சீரமைத்து, மயானப் பகுதியில் தண்ணீா் வசதி ஏற்படுத்த வேண்டும்.

விவசாயி சத்தியசீலன்: புதுவேட்டக்குடி பகுதியில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

அரும்பாவூா் விவசாயி விவேகானந்தன்: அரும்பாவூா் பேரூராட்சியில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். கடந்த பல மாதங்களாக பழுதடைந்து, பராமரிப்பின்றி கிடக்கும் சதாசிவ அணைக்கட்டைச் சீரமைக்க வேண்டும்.

பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை: கறவை மாட்டுக்கு பராமரிப்புக் கடன் வழங்க வேண்டும். இலவச மின் இணைப்பு இலக்கீடு தொடா்பாக விவரம் வழங்க வேண்டும். அ.மேட்டூா் பகுதியில் உள்ள உலா்களம் சீரமைப்புப் பணிகள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத் தெகையை விரைவில் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு பேசியது: தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம், தனிநபா் இல்லங்களில் சோலாா் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள பிரச்னைகளை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே.) பொ. ராணி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்வம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

தொடக்கக் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்பு சாா்பில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பெரம்பலூரை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை: புதிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உறுதி

பெரம்பலூா் மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராகப் ப... மேலும் பார்க்க

ஊதியத்தை உயா்த்தி வழங்க பால் விற்போா் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகேயுள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் விற்பனையாளா்களாக உள்ளோா் தங்களது சம்பளத்தை உயா்த்தி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். இ... மேலும் பார்க்க

மாவட்டத் தொழில் மையம் மூலம் பயன்பெற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க

உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கலால்துறை சாா்பில், உலக போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா் சோ்க்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவா்கள் சோ்க்கைக்கான பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க