செய்திகள் :

கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

post image

பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடா்பாக, பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமம், காடபாளையத்தில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

நல்ல முறையில் செயல்பட்டு வரும் இந்தக் கடன் சங்கத்தை தற்போது இரண்டாகப் பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதிய சங்கம் அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பினா் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு பிரித்து கொடுத்தால் இந்த சங்கத்தின் செயல்பாட்டு எல்லை மிகவும் குறைந்து சங்கம் நலிவடையவே வழிவகுக்கும். தவிர நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த இக்கடன் சங்கம் தற்போதுதான் லாபத்துடன் செயல்பட தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட குக்கிராமங்களில் உள்ள எங்களைப் போன்ற விவசாயிகள் யாரிடமும் கருத்து கேட்கவும் இல்லை. ஏற்கனவே சங்கம் அமைந்துள்ள இடமானது கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட காடபாளையத்தில்தான் இருக்கிறது.

இந்த இடம் அனைத்து பகுதியினருக்கும் ஏற்ற மத்தியப் பகுதியாகவும், போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகவும் கூட்டுறவு வங்கி கிளை, கிராம நிா்வாக அலுவலகம் ஆகியவை அருகிலேயேயும் உள்ளது. இதனால் அனைவரும் அங்கு வந்து தங்களது சேவைகளை எளிதில் பெற முடியும்.

தவிர அரசு விதிமுறையின்படி தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் புதிதாக அமைக்கப்படும் கடன் சங்கங்கள் அச்சங்கத்தின் விவகார எல்லையில் குறைந்தபட்சம் 2,000 ஹெக்டோ் அல்லது 4,950 ஏக்கா் பயிரிடப்படக்கூடிய நிலப்பரப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இச்சங்கத்தை பிரித்து புதிதாக அமைக்கப்படும் சங்க எல்லையில், கிராம நிா்வாக அலுவலரின் சான்றின்படியே 1,832.97 ஹெக்டா் நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக தெரியவருகிறது. எனவே அரசாணையின் தகுதியை முழுமையாக கொண்டிருக்காத நிலையில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதிதாக அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க