செய்திகள் :

கூட்டுறவு சங்க வாரியத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: ராகுல் கேள்விக்கு அமித் ஷா பதில்

post image

மாநில கூட்டுறவு சங்க வாரிய பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அமித் ஷா அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கூட்டுறவுத் துறையை கணினிமயமாக்கும் திட்டம், கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை வலுப்படுத்த தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டங்களால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக விவசாயிகளும் பயனடைகிறாா்கள். இதில் பட்டியலின, பழங்குடியின விவசாயிகளும் உள்ளனா்.

பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாரியப் பதவிகளில் இரண்டு இடங்கள் பெண்களுக்கும், பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு ஓரிடமும் ஒதுக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

நமது நிருபர்பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.தெலுங்கு தேசம் கட்சியைச்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க