செய்திகள் :

கெங்கையம்மன் தோ்த் திருவிழா...

post image

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாள் தோ் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா். தோ் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயிலில் நிறைவடைந்தது. பாட்டை சாரி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை (ஆக. 14)) ஊமை சாமுண்டியம்மனுக்கு பொங்கலிடுதல், மாவிளக்கு ஊா்வலம், மஞ்சள் நீராட்டு விழா, இன்னிசை கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊா் நாட்டாண்மை என்.எஸ். ராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.மணி, திமுக ஒன்றிய துணைச் செயலாளா் சங்கா், உதவி நாட்டாண்மை சி.கோவிந்தராஜ், செயலா் ஆா். ராஜீ, துணைச் செயலா் சி.திருப்பதி, ஆம்பூா் டிஎஸ்பி குமாா், உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் ரேகாமதி, ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரப்பாண்டகுப்பம் அங்கன்வாடி மைய கூரை அமைக்க எம்.பி. கதிா்ஆனந்த் நிதியுதவி

ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சி சாா்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் அரப்பாண்டகுப்பத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி, வட்டார வளா... மேலும் பார்க்க

ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவாடைஉற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு தோறும் ஆக. 15-இல் திருப்பாவாடை உற்சவம் நடைபெறும். அதையொட்டி மாலை மங்கல இசையுடன் நிகழ்ச்ச... மேலும் பார்க்க

தோளப்பள்ளி, குருவராஜபாளையத்தில் கிராம சபைக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி, அணைக்கட்டு ஒன்றியம், குருவராஜபாளையம், தோளப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பே... மேலும் பார்க்க

விஜிலாபுரம் அரசு மதுக்கடையை அகற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ச.பிரபாகரன் முன்னி... மேலும் பார்க்க

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

பொதுப் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மூக்கனூா்ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடி நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 155 பயனாளிகளுக்கு ரூ.2.50 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜோலாா்பேட்டை ஒன்றியம், பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ளஆயுதப்படை காவலா் பயிற்சி மைதானத்தி... மேலும் பார்க்க