செய்திகள் :

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

post image

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 2024-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்குத் தேவையான சுமார் 1000 மெட்ரிக் டன் அரசி மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை, கேமரூன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் விஜய் கந்துஜா, அந்நாட்டு பிராந்திய நிர்வாக அமைச்சர் பால் அடாங்கா இன்ஞியிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து, விஜய் கந்துஜா வெளியிட்ட முகநூல் பதிவில், அவசரகாலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பின் அடிப்படையில், இந்த மனிதாபிமான உதவியானது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் கேமரூன் நாட்டுக்கு இந்திய அரசு சார்பில் 1000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க

"அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு'

"எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா். மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியி... மேலும் பார்க்க

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டுக்கு நிா்மலா சீதாராமன் பதில்

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 8 விதமான வரிகளாக குறைக்கப்பட்டுள்ளன’ என ... மேலும் பார்க்க

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு தொடா... மேலும் பார்க்க