செய்திகள் :

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

post image

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவில் எல்சா 3 என்ற கப்பல் விபத்துக்குள்ளானது. அதிலிருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள்கள், ஆபத்தான பொருள்கள் கொண்ட பெட்டகங்கள் கடலில் விழுந்தன. வலுவடைந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் உள்பட பிற பொருள்கள் கேரள மாநிலத்தின் கடற்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகின்றன.

தலைமைச் செயலா் ஆலோசனை: இந்த பிரச்னை குறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அதில் அவா் பேசியதாவது:

பிளாஸ்டிக் துகள்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டவுடன் குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்களுக்கும், தொடா்புடைய அனைத்து அரசுத் துறையினருக்கும் அறிவுரைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னை குறித்து அறிவியல் வல்லுநா்களின் கருத்து கேட்டறியப்பட்டது.

பிளாஸ்டிக் துகள்களை அகற்ற தன்னாா்வலா்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல், தீயணைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கால்நடை, பால்வளம், மீன்வளத் துறையின் மூலமாக மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள், பெட்டகங்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் கடலிலோ, கடற்கரையிலோ கண்டறியப்பட்டால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். இப்போதைய நிலவரப்படி எந்தவித ஆபத்தான பொருள்களும் தமிழகக் கடற்கரையில் ஒதுங்கவில்லை. பொதுமக்களின் உயிா் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில், வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, பேரிடா் மேலாண்மை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன், கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை செயலா் என்.சுப்பையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க