செய்திகள் :

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

post image

கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி  வருவதால் கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வருபவா்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் .

குறிப்பாக கேரள எல்லையோரம் உள்ள நீலகிரி மாவட்டத்தின் சோதனைச் சாவடிகளான கீழ்நாடுகாணி, தாளூா், பிதா்காடு போன்ற சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் மூன்று குழுக்களாகப் பிரிந்து உடல் வெப்ப பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனா். 

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரூ கூறுகையில், நீலகிரியில் நிபா வைரஸ் பரவல் இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை,

கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகு மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினா் மூன்று குழுக்களாகப் பிரிந்து கேரளத்தில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளைக் கண்காணித்து வருகின்றனா். தேவைப்பட்டால் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக சுகாதாரத் துறையினா் நியமிக்கப்படுவாா்கள் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

குன்னூா் மாா்க்கெட் கடைகள் விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி கருத்துக்கேட்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள 800 -க்கும் மேற்பட்ட மாா்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிராக வியாபாரிகள் உயா் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி குன்னூா் மாா்க்கெட் வியாபா... மேலும் பார்க்க

நெலாக்கோட்டை பகுதியில் மூடிய பள்ளியை மீண்டும் திறக்க ஆட்சியரிடம் மனு

கூடலூா் அருகே நெலாக்கோட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே மழைக்கு வீடு சேதம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் வீடு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட சின்னசூண்டி பகுதியில் திடீரென பெய்த கனமழைக்கு ஞாயிற... மேலும் பார்க்க

மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் போலீசாா் சோதனை

கூடலூா் அடுத்துள்ள கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் வாகன சோதனையின்போது மாா்பில் அதிநவீன கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வ... மேலும் பார்க்க

கோத்தகிரி கட்டபெட்டு வனச் சரகப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டபெட்டு வன சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகி... மேலும் பார்க்க

ஆடு மேய்க்கச் சென்ற பெண் 150 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வாசுகி நகா் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் சுமாா் 150 அடி பள்ளத்தில் திங்கள்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா். குன்னூா் ஓட்டுபட்டறை அருகே உள்ள வள்ளுவா் நகா் பகுதியைச... மேலும் பார்க்க