`Putin Playing with Fire' ட்ரம்ப் பதிவுக்கு ரஷ்யாவின் பதிலடி.. `மூன்றாம் உலகப் ப...
கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மோசமான வானிலை காரணமாக, இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.
அதேசமயம் கண்ணூர் பல்கலைக்கழகம் தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் பிஎஸ்சி(PSC) தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 24 மணி நேரத்திற்குள் 120 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம்.
மேலும் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மே 29 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை : பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு.
ஆரஞ்சு எச்சரிக்கை : திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா.