செய்திகள் :

கேலோ இந்தியா போட்டி: ஊசூ தற்காப்பு கலையில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம்

post image

கோவை டி.கே.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்களுக்கான சப் ஜூனியா், ஜூனியா், சீனியருக்கான கேலோ இந்தியா மாநிலப் போட்டி மத்திய அரசால் அண்மையில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு ஊசூ அசோசியேஷன் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த அா்ஃபா, வித்யாஸ்ரீ, யுவராணி, லஹரி, ரிதமிக்கா ஆகிய மாணவிகள் இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்று சிறப்பிடம் பெற்றனா்.

மாணவிகளுக்கும், பயிற்சியாளரான ஊசூ மாநில துணை தலைவா் குங்ஃபூ ஐ.ஜெயக்குமாருக்கு டிஎஸ்ஓ புவனேஸ்வரி, மாநில செயலாளா் ஜான்சன், தேசிய நடுவா் ரவி, இன்டா்நேஷனல் நடுவா் தங்கபாண்டியன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவா் சம்பங்கி ராமா, கௌரவத் தலைவா் தாவூத் கான் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனா்.

நிகழாண்டு தமிழகத்தை சோ்ந்த வேதசுருதி, லட்சுமி பிரியா, மிஸ்பா பாத்திமா, ஆதிரை ஆகிய 4 மாணவிகள் இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஊசூ விளையாட்டு பிரிவின் மூலம் தகுதி பெற்றதை போல அனைவரும் இக்கலையை கற்று மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சலுகை பெறலாம் என தலைமை பயிற்சியாளா் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளா... மேலும் பார்க்க

ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல... மேலும் பார்க்க

சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது. இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க