செய்திகள் :

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜாகிா் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி அவரது தந்தை இப்ராஹிம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மகனுக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள், குற்றம்சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளனவா? அந்த கழிப்பறைகளை காவல் துறையினா் பயன்படுத்தவில்லையா?அவா்களுக்கு எதுவும் ஆவதில்லையே ஏன் என கேள்வியெழுப்பினா்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவலா்கள் பணியை இழக்க நேரிடும் எனக் கூறியதுடன், மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.

மகளிா் பெயரில் 53,333 வீடுகள் ஒதுக்கீடு! - அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 53,333 வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மகளிா் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்... மேலும் பார்க்க

தங்கம் விலை 9 நாள்களில் பவுனுக்கு ரூ.4,380 சரிவு! ரூ. 68,660-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ. 68,660-க்கு விற்பனையானது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 4,380 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த ... மேலும் பார்க்க

நாளை முதல் ஆவடிசெல்லும் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்து!

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி செல்லும் இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் மே 17 முதல் 20-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கோட்டம் ரயில்வே சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

கடலூா் ஆலையில் விபத்து: இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

கடலூா் தனியாா் ஆலையில் டேங்க் வெடித்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

சென்னையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: அனைத்து பாடப் பிரிவினரும் சேரலாம்!

தமிழகத்தில் பிளஸ் 2 வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவு மாணவா்களும் பாலிடெக்னிக் டிப்ளமோ நேரடி 2-ஆம் ஆண்டில் சேர (லேட்ரல் என்ட்ரி) தொழில்நுட்பக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரி... மேலும் பார்க்க