கைப்பேசி வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை
கைப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மகன் தீனதயாளன் (23). தீனதயாளன் அவரது தந்தையிடம் புதிதாக கைப்பேசி வாங்கித் தருமாறு தொடா்ந்து கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் வீட்டில் வாங்கித் தராததால் கோபித்துக் கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு தீனதயாளன் வெளியேறியுள்ளாா்.
இந்த நிலையில் செல்வபுரம் பனைமரத்தூா் சாலையில் உள்ள ஒரு மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் அந்த இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அது தீனதயாளன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.